ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமை நாகேஷ். கதாநாயகன், காமெடியன், வில்லன், குணசித்ர நடிகன் என பன்முகம் கொண்டவர். சினிமா பற்றிய ஞானம் கொண்டவர். அப்படிப்பட்டவர் கே.பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் வற்புறுத்தியும் படம் எதையும் இயக்கவில்லை. "நான் ஜாலியான ஆளு, டைரக்ஷன் டென்ஷனான வேலை அது எனக்கு சரிப்பட்டு வராது" என்று கூறிவிடுவார்.
அப்படி இருந்தும் அவர் ஒரே ஒரு படத்தை இயக்கினார். அந்த படம் 'பார்த்த ஞாபகம் இல்லையோ'. இது அவர் தன் மகனுக்காக இயக்கியது. மகன் ஆனந்த் பாபு சினிமாவில் அறிமுமாகி மளமளவென பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. ஒரு வெற்றிப் படத்தின் மூலம் அவரை தூக்கி நிறுத்த வேண்டிய கடமை அப்பா நாகேஷிற்கு இருந்தது. அதனால் அவர் முதன் முறையாக இயக்குனராக மாறி இந்த படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் ஆனந்த் பாபுவுடன் ரம்யா கிருஷ்ணன், ராதாரவி, தேங்காய் சீனிவாசன், ஆர்.எஸ்.மனோகர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இரட்டை சகோதரிகள் சிறு வயதிலேயே பிரிந்து விடுகிறார்கள். ஒருத்தி பணக்கார வீட்டிலும், இன்னொருத்தி ஏழை வீட்டிலும் வளர்க்கப்படுகிறார்கள். இருவரையும் வைத்து ஆள்மாறாட்ட கதையாக காமெடி கலந்து படம் உருவானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நாகேசும் தொடர்ந்து படம் இயக்கவில்லை.