ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அதர்வா நடித்த ஈட்டி, ஜிவி பிரகாஷ் நடித்த ஐங்கரன் ஆகிய படங்களை இயக்கியவர் ரவி அரசு. அதன் பின்னர் சிவராஜ் குமாரை வைத்து 'ஜாவா' என்ற படத்தை இவர் இயக்கவிருத்தார். ஆனால் சிவராஜ் குமாரின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அந்த படம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதனால் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் இறங்கினார். அதன்படி நடிகர் விஷாலிடம் ஒரு கதை சொல்லி ஓகே பெற்றிருந்தார்.
இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் இந்த படம் உருவாக உள்ளது. இதை விஷாலே அவரது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இப்போது இதில் கதாநாயகியாக நடிக்க துஷாரா விஜயன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள்.
சார்பட்டா பரம்பரை, ராயன், வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் துஷாரா விஜயன். கடந்தவாரம் விக்ரம் உடன் இவர் நடித்த வீர தீர சூரன் படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது விஷால் உடன் இணைந்து நடிக்க போகிறார். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.