வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தெலுங்குத் திரையுலகத்தின் டாப் ஸ்டார்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். 'புஷ்பா 2' படத்தின் மாபெரும் வெற்றி, வசூலுக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டார்களில் ஒருவராகிவிட்டார். அவரது அடுத்த படத்தை தமிழ் இயக்குனரான அட்லி இயக்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. வரும் ஏப்ரல் 8ம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படத்தில் அல்லு அர்ஜுன் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இரட்டையர்களாகப் பிறந்த சகோதரர்களாக அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளாராம். அதனால்தான் அவருக்கு படத்தின் கதை மிகவும் பிடித்துவிட்டது என்கிறார்கள். சினிமா உலகில் அறிமுகமான இந்த 22 ஆண்டுகளில் அவர் இரு வேடங்களில் நடித்ததே இல்லை. முதல் முறையாக அப்படி நடிக்க உள்ளார்.
அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக இப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாராக உள்ளது என்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் படம் பற்றிய ஏதோ ஒரு அப்டேட் அதிகாரப்பூர்வமாக வருவது உறுதி என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.