ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
‛ஜவான்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கின்றார். புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாக உள்ளது.
அல்லு அர்ஜுன், அட்லி கூட்டணியில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக ஏற்கனவே தகவல்கள் கூறப்பட்டது. தற்போது இதற்கான முன் தயாரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிரியங்கா சோப்ரா இப்போது ராஜமவுலி, மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .