சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடித்து சங்கராந்திக்கு வெளிவந்த 'கேம் சேஞ்சர்' படம் 400 கோடி ரூபாய் செலவில் உருவானதாக சொல்லப்பட்டது. ஆனால், படத்தின் வசூல் 150 கோடி மட்டுமே என்றார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் ராம் சரணுக்கு எதிர்பாராத தோல்வியைத் தந்து அதிர்ச்சியடைய வைத்தது.
இருந்தாலும் அதில் விட்டதை 'பெத்தி' படத்தில் ராம் சரண் பிடித்துவிடுவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களுக்கு வந்துவிட்டது. அதற்கு சாட்சியாக நேற்று வெளியான 'க்ளிம்ப்ஸ்' எனும் முன்னோட்டவீடியோ நிரூபித்துள்ளது.
வெளியான 24 மணி நேரத்தில் யு டியுபில் மட்டுமே தெலுங்கு க்ளிம்ப்ஸ் 36.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் யஷ் நடித்து வரும் 'டாக்சிக்' படத்தின் 24 மணி நேர க்ளிம்ப்ஸ் சாதனையை 'பெத்தி' முறியடித்துள்ளது. 'டாக்சிக்' படம் 31.5 மில்லியன் பார்வைகளை 24 மணி நேரத்தில் பெற்றிருந்தது.
'வேர் இஸ் புஷ்பா' ஹிந்தி க்ளிம்ப்ஸ் 27.6 மில்லியன், 'தேவரா' 26.1 மில்லியன், 'குண்டூர் காரம்' 20.9 மில்லியன், 'வேர் இஸ் புஷ்பா' தெலுங்கு க்ளிம்ப்ஸ் 20.4 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன.
ஏஆர் ரஹ்மானின் அசத்தலான பின்னணி இசை, ரத்தினவேலுவின் அற்புதமான ஒளிப்பதிவு, புச்சி பாபு சனாவில் அதிரடியான இயக்கம், ராம் சரணின் வித்தியாசமான தோற்றம் ஆகியவைதான் 'பெத்தி' பட க்ளிம்ப்ஸ் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெறக் காரணம் என விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.
வழக்கமான பிரம்மாண்டம் தேவையில்லை, புதிதாக ஏதாவது ஒன்று வேண்டும், அதை வரவேற்கத் தயாராக இருக்கிறோம் என ரசிகர்கள் சில இயக்குனர்களுக்கு இதன் மூலம் வெளிப்படுத்துவதாகவே நாம் அர்த்தம் கொள்ள வேண்டும்.