ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக மற்றும் குணச்சித்ர கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரியதர்ஷி புலிகொண்டா. இவர் ஏ.ஆர்.முருகதாஸின் ‛ஸ்பைடர்', ஷங்கரின் ‛கேம் சேஞ்சர்' உள்ளிட்டட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் தெலுங்கில் 'கோர்ட்' எனும் படத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சமீபத்தில் தமிழில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமா குறித்து அவர் கூறியதாவது,"ஷங்கர் சார், ஏ.ஆர்.முருகதாஸ் சார் இயக்கத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷம். சினிமாவில் கமல்ஹாசன் சார்தான் என்னோட இன்ஸ்பிரேஷன். அவர்கூட நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதேமாதிரி, மணிரத்னம் சார், பா.ரஞ்சித் சார், வெற்றிமாறன் சார் படங்களில் நடிக்கணும்னு என் விருப்பம். பா.ரஞ்சித் சார் நான் பிரமிக்கிற பெரிய இயக்குநர். மக்களை நேசிக்கிற சமூகச் செயற்பாட்டாளர். அவர் படத்துல நடிக்கணும்னு ரொம்பவே ஆசைப்படுறேன்" என இவ்வாறு தெரிவித்துள்ளார்.