ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அல்லு அர்ஜுன், அட்லி இணைய உள்ள பிரம்மாண்டப் படத்தில் மூன்று கதாநாயகியர் நடிக்கப் போவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளிவந்தன. பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்கள் சிலரிடம் அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. சிலர் கால்ஷீட் இல்லாத காரணத்தால் நடிக்க முடியாத சூழலை சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி மிருணாள் தாகூர் முதல் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். விரைவில் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகலாம் என்றும் தெரிகிறது. மூன்றாவது கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது விரைவில் முடிவாகலாம்.
'சீதா ராமம், ஹாய் நானா' படங்கள் மூலம் தெலுங்கு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் மிருணாள். ஹிந்தியிலும் அவர் நடித்துள்ளதால் படத்தின் பான் இந்தியா வெளியீட்டிற்குப் பொருத்தமாக இருப்பார் எனத் தேர்வு செய்துள்ளார்களாம். படத்தின் கதாநாயகிகள் யார் யார் என்பது குறித்த அப்டேட்ஸ் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.