ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான தொடரும் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. பொதுவாக இப்போது இருக்கும் மலையாள ஹீரோக்களில் சண்டைக் காட்சிகளின் மூலம் ரசிகர்களை வசீகரிப்பதில் இப்போதும் மோகன்லால் தான் முதலிடத்தில் இருக்கிறார். அந்த வகையில் அவரது படங்களில் தொடர்ந்து சண்டை காட்சிகளை வடிவமைத்து வருபவர் ஸ்டன்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா தான். ஒன்றிரண்டு படங்களில் மட்டும் பீட்டர் ஹெய்ன் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இந்த தொடரும் படத்திலும் ஸ்டண்ட் சில்வா தான் பணியாற்றியுள்ளார்.
கிளைமாக்ஸுக்கு முந்தைய அரைமணி நேரத்தில் கிட்டத்தட்ட மூன்று சண்டைக்காட்சிகள் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. மூன்றுமே விறுவிறுப்பாகவும் கதையின் போக்கில் இருக்கை நுனியில் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகர்களிடம், “அவர்களை விடாதே.. அடி” என்று உத்வேகத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பரபரப்பாக உருவாக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து நெகிழ்ந்து போன ஸ்டண்ட் சில்வா தனது சோசியல் மீடியா பக்கத்தில், “தொடரும் படத்திற்கும் படத்தில் என்னுடைய வேலைக்கும் கிடைத்து வரும் பாசிட்டிவான விமர்சனங்களை பார்த்து மகிழ்ந்து போயிருக்கிறேன். மோகன்லால் சாருக்கும் மொத்த படக்குழுவிற்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்” என்று கூறியுள்ளார்.