வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஆக் ஷன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பரவலாக நடித்து வரும் இவர் தற்போது சூரிக்கு ஜோடியாக ‛மாமன்' படத்தில் நடித்துள்ளார். ஒரு சிறுவனுக்கும், அவனது தாய்மாமனுக்கும் இடையே நடக்கும் பாசத்தை வைத்து குடும்ப படமாக எடுத்துள்ளனர். பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். ராஜ்கிரண், சுவாசிகா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மே 16ல் படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : ‛‛சூரி மிகவும் நேர்மையான மனிதர். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் நன்மை உள்ளது. அவர் பேசும் வார்த்தைகளிலும் அன்பு, மரியாதை உள்ளது. அவருடன் இணைந்து நடித்ததில் எனக்கு பெருமையாக உள்ளது'' என்றார்.