தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சாரா கலைக்கூடம் நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரித்துள்ள படம் 'ஆகக் கடவன'. புதுமுகம் ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அரசு திரைப்படக் கல்லூரி மாணவரான தர்மா. லியோ வெ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். சாந்தன் அன்பழகன் இசை அமைத்துள்ளார். இந்த படம் நாளை (23ம் தேதி) வெளியாகிறது. படம் பற்றி இயக்குனர் தர்மா கூறியதாவது: நெடுஞ்சாலையில், பஞ்சரான பைக்கோடு, தன் நண்பனுடன் காத்திருக்கும் ஹீரோவிற்கு, அடுத்தடுத்து அங்கு நடக்கும் சம்பவங்கள், அவன் வாழ்க்கையையே ஆபத்தில் கொண்டு சேர்க்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லும் படம்.
பெண் கதாபாத்திரங்களே இடம்பெறாத சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். முழுக்க முழுக்க ஆண் கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். பெண் கதாபாத்திரங்களை வேண்டுமென்றே இல்லாததுபோல், கதையை அமைக்கவில்லை. கதைக்கு அவர்கள் தேவைப்படவில்லை. அவ்வளவுதான். இதுவரை சொல்லப்படாத கதைகளத்தில் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். என்றார்.