சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
அட்டக்கத்தி, பீட்சா, தெகிடி உட்பட பல படங்களின் எடிட்டிரான லியோ ஜான்பால் இயக்கும் மார்கன் படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஜய் ஆண்டனி. அடுத்த மாதம் படம் ரிலீஸ். அவரே தயாரித்து, இசையமைத்தும் உள்ளார். அவருடைய சகோதரி மகன் அஜய் இதில் வில்லன்.
சென்னையில் நடந்த பட விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, இது நான் நடிக்கும் 26வது படம், பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். பல படங்களை தயாரித்து இருக்கிறேன். அடுத்தும் சில படங்களை தயாரிக்கப்போகிறேன். ஆனாலும், கடன் வாங்கிதான் படம் தயாரிக்கிறேன். இப்போதும் வட்டிக்கட்டிக்கொண்டு இருக்கிறேன்'' என்றார்.
மேலும் அவர் பேசுகையில் ''நான் எத்தனை படங்கள் நடித்தாலும் பிச்சைக்காரனை மறக்க முடியாது. என்னை டிஷ்யூம் படத்தில் அவர்தான் இசையமைப்பாளர் ஆக்கினார். அவரை மறக்கமாட்டேன். மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கப் போகிறேன். அந்த படத்திலும் என் மருமகன் அஜய்க்கு முக்கியமான வேடம்' என்றார்.
மார்கன் படத்தில் ஆந்தை, ஆமை முக்கியமான பாத்திரமாக வருவதால், சென்னையில் நடந்த விழா மேடையிலும் ஆந்தை, ஆசை உருவகங்களை விஜய் ஆண்டனி வைத்து இருந்தார். ஆமை, அமீனா குறித்து பல மூட நம்பிக்கைகள் இருக்கிறது. அதை தவிர்க்கவே மேடையில் இதை செய்தேன்' என்றார் விஜய் ஆண்டனி.