ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் ரவிமோகன், ஆர்த்தி விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ரவிமோகனுக்கும் பாடகி கெனிஷாக்கும் இடையிலான உறவு வெளிச்சத்துக்கு வந்தது. இதன் பிறகு இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. ரவிமோகன், ஆர்த்தி, கெனிஷா ஆகிய மூவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டனர்.
சமூக வலைதளங்களை பொறுத்தவரை பெரும்பாலோனார் ஆர்த்திக்கு ஆதரவாக உள்ளனர். நல்ல குடும்பத்திற்குள் புகுந்து கெடுப்பதாக கெனிஷா மீது விமர்சனம் செய்து வருகிறார்கள். அதோடு சில நெட்டிசன்கள் எல்லை மீறி கெனிஷாவுக்கு பாலியல் மிரட்டல், கொலை மிரட்டல் கூட விடுத்துள்ளனர். இந்த நிலையில் தனக்கு பலாத்கார மிரட்டல், கொலை மிரட்டல் விடுத்து போடப்பட்ட கமெண்ட்டுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு 'கடவுளே இதை எல்லாம் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன்' என்றார். மேலும் 'நான் தவறு செய்திருந்தால் நீ என்னை எரித்துவிடு இறைவனே' என்று பதிவிட்டிருந்தார்.
இருப்பினும் கெனிஷாவிற்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் கெனிஷா தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'தன்னை பற்றி வெளியான செய்திகள், வீடியோக்கள், மோசமான கமெண்ட்டுகள், மோசமான புகைப்படங்கள் ஆகியவற்றை 48 மணிநேரத்திற்குள் நீக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.