தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கோலிவுட்டில் பிரபலங்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது அடிக்கடி நடக்கும். ஆனால், சிறிது காலத்தில் அவர்களின் பிரிவு செய்தியை மக்கள் மறந்துவிடுவார்கள் அல்லது அது வழக்கமான ஒன்றாகிவிடும். ஒருவர் பற்றி மற்றவர் குறை சொல்வது அரிது. தனுஷ், ஐஸ்வர்யா பிரிந்தார்கள், விஷ்ணுவிஷால், அவர் மனைவி ரஜினியை பிரிந்தார், ஜிவி பிரகாஷ் - சைந்தவியை பிரிந்தார். ஆனால், அவர்கள் தங்கள் பார்ட்னர் பற்றி மீடியாவில் பேசியது இல்லை, சண்டை போடவில்லை.
ஆனால், ரவி மோகன், ஆர்த்தி விஷயத்தில் சில வாரங்களாக இரண்டு பேரும் மாறி, மாறி சண்டை போட்டு அறிக்கை விட்டனர். ஒரு கட்டத்தில் கோர்ட் தலையிட அவர்கள் அறிக்கை போரை நிறுத்த வேண்டிய கட்டாயம். அடுத்து இந்த விவகாரத்தில் பேசப்பட்ட பாடகி கெனிஷாவும் சில அறிக்கை விட்டார். நேற்று தங்கள் மீது தவறாக பேசும் பாடகி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்த்தி அப்பா போலீசில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் எப்போது முடிவுக்கு வரும். இவர்களுக்குள் என்னதான் பிரச்னை? சட்டப்படி சில விவகாரங்கள் நடக்க, இவர்கள் மீடியா முன்பு சண்டைபோடுவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.