தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் சிறு வயதிலேயே இருந்தே சினிமாவில் நடித்து வந்தார். பின்னர் கதாநாயகனாக மாறினாலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போராடி வருகிறார். இந்த நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சாந்தனுவிற்கும், கீர்த்திக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இன்னும் குழந்தை செல்வம் கிடைக்கவில்லை. பலரும் சாந்தனுவின் யு-டியூப் சேனலில் இது குறித்து தங்களது கவலைகளையும் ஆதங்கங்களையும் கேள்விகளாக கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் சாந்தனு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என பலரும் கேட்டு வருகிறீர்கள் ? நாங்கள் தயார். ஆனால் அதை நீங்கள் வளர்க்க போகிறீர்களா? இல்லையே.. இப்படி கேட்பதால் என்னை முரட்டுத்தனமானவன் என நினைக்க வேண்டாம். இது எங்களுடைய வலி. இதுபோன்று தொடர் கேள்விகள் எங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கின்றன. கடவுள் எப்போது குழந்தை கொடுக்க வேண்டும் என சரியான நேரத்தை தீர்மானித்து இருப்பார்” என்று பதிலடி தரும் விதமாக கூறியுள்ளார்.