தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு வகித்தவர் படத்தொகுப்பாளராக பணியாற்றிய மகேஷ் நாராயணன். அதனை தொடர்ந்து மலையாளத்தில் இயக்குனராகவும் மாறிய அவர் பஹத் பாசிலை வைத்து டேக் ஆப், சி யூ சூன், மாலிக் மற்றும் உயரே உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், நயன்தாரா என மலையாள சினிமாவில் முன்னனி நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது.
இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவர் பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான ஒன்லைனை சல்மான் கானிடம் அவர் சொல்லிவிட்டதாகவும் அது சல்மான்கானுக்கு பிடித்து விட்டதால் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்துவிட்டு தன்னிடம் வருமாறு கூறியுள்ளார் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சல்மான் கானின் சகோதரியும் அவரது கணவரும் இணைந்து தயாரிக்கிறார்கள் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.




