தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் 2002ம் திருமணம் செய்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 2021ம் ஆண்டில் இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர். இருவரும் நீதிமன்றத்தின் மூலமாக விவாகரத்தும் பெற்றனர். இருவரும் அவரவர் பணியில் உள்ளனர். மகன்கள் அப்பா, அம்மா இருவரிடமும் வளர்கின்றனர்.
இந்நிலையில் இவர்களின் மூத்த மகன் யாத்ரா, சென்னையில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் படித்து வருகிறார். அவரின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதற்காக தனுஷ், ஐஸ்வர்யா ஒன்றாக கலந்து கொண்டு மகனை வாழ்த்தினர். இந்த போட்டோவை தனுஷ் அவரது வலைதளத்தில் பகிர்ந்து, ‛‛பெருமைமிக்க பெற்றோர்'' என குறிப்பிட்டுள்ளார். விவாகரத்துக்கு பின் தங்களது மகனின் பள்ளி விழாவின் மூலம் மீண்டும் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டது வலைதளங்களில் வைரலானது.
இதனிடையே ரஜினி தனது எக்ஸ் தளத்தில் இந்த போட்டோவை பகிர்ந்து, ‛‛என் அன்பான பேரன் முதல் மைல்கல்லை கடந்துவிட்டான். வாழ்த்துகள் யாத்ரா கண்ணா'' என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார்.