கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் 2002ம் திருமணம் செய்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 2021ம் ஆண்டில் இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர். இருவரும் நீதிமன்றத்தின் மூலமாக விவாகரத்தும் பெற்றனர். இருவரும் அவரவர் பணியில் உள்ளனர். மகன்கள் அப்பா, அம்மா இருவரிடமும் வளர்கின்றனர்.
இந்நிலையில் இவர்களின் மூத்த மகன் யாத்ரா, சென்னையில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் படித்து வருகிறார். அவரின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதற்காக தனுஷ், ஐஸ்வர்யா ஒன்றாக கலந்து கொண்டு மகனை வாழ்த்தினர். இந்த போட்டோவை தனுஷ் அவரது வலைதளத்தில் பகிர்ந்து, ‛‛பெருமைமிக்க பெற்றோர்'' என குறிப்பிட்டுள்ளார். விவாகரத்துக்கு பின் தங்களது மகனின் பள்ளி விழாவின் மூலம் மீண்டும் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டது வலைதளங்களில் வைரலானது.
இதனிடையே ரஜினி தனது எக்ஸ் தளத்தில் இந்த போட்டோவை பகிர்ந்து, ‛‛என் அன்பான பேரன் முதல் மைல்கல்லை கடந்துவிட்டான். வாழ்த்துகள் யாத்ரா கண்ணா'' என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார்.