'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

பாலியல் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் பாடகி சின்மயி. அதோடு, மீ டூ விவகாரத்தில் அவர் வெளியிட்ட சில குற்றச்சாட்டுகள் தொடர்ந்து விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தனது பேஸ்புக்கில் அவர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'கடந்த சில ஆண்டுகளாகவே நான் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறேன். அதனால் அவமானங்கள், துன்புறுத்தல்கள், விபச்சாரி, அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டவள் என பல விமர்சனங்களை எதிர் கொண்டேன். அது எல்லாவற்றையுமே கடவுளிடத்திலேயே அர்ப்பணிக்கிறேன். குறிப்பாக தற்போது நான் பெற்று வரும் ஆதரவுகளையும், பாலியல் வன்கொடுமை செய்து வருபவர்களுக்கான ஆதரவுகளையும் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன். கடவுளும், கர்மாவும் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கட்டும். இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தப்பி பிழைத்த அனைவரும் இப்போது எனக்கு கிடைக்கும் ஆதரவை பெறட்டும். உண்மை வெல்லட்டும்' என்று அந்த பதிவில் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.