ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கமல்ஹாசனும், மணிரத்னமும் 'நாயகன்' படத்தை அடுத்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த படம் 'தக்லைப்'. கேங்ஸ்டர் கதையில் உருவான இந்த படத்தை மெகா ஹிட் படம் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக கமல்ஹாசனுடன், சிம்பு, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பல பிரபலங்களை நடிக்க வைத்தார் மணிரத்னம். என்றாலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான தக்லைப் படத்தின் மோசமான திரைக்கதை காரணமாக முதல் நாளில் இருந்தே அந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாக தொடங்கின.
அதனால் இந்திய அளவில் முதல் நாளில் 17 கோடி வசூலித்த இப்படம், இரண்டாவது நாளில் 7.15 கோடியும், மூன்றாவது நாளில் 7.75 கோடியும், நான்காவது நாளில் 6.5 கோடியும் வசூலித்த நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் 3.25 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அந்த வகையில் இதுவரை இந்த படம் 40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, இது இந்தியன்- 2 படத்தை விட குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்தமான வசூல் காரணமாகவே இதுவரை தக்லைப் படக்குழு அப்படத்தின் வசூல் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார்கள்.