தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கமல்ஹாசனும், மணிரத்னமும் 'நாயகன்' படத்தை அடுத்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த படம் 'தக்லைப்'. கேங்ஸ்டர் கதையில் உருவான இந்த படத்தை மெகா ஹிட் படம் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக கமல்ஹாசனுடன், சிம்பு, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பல பிரபலங்களை நடிக்க வைத்தார் மணிரத்னம். என்றாலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான தக்லைப் படத்தின் மோசமான திரைக்கதை காரணமாக முதல் நாளில் இருந்தே அந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாக தொடங்கின.
அதனால் இந்திய அளவில் முதல் நாளில் 17 கோடி வசூலித்த இப்படம், இரண்டாவது நாளில் 7.15 கோடியும், மூன்றாவது நாளில் 7.75 கோடியும், நான்காவது நாளில் 6.5 கோடியும் வசூலித்த நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் 3.25 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அந்த வகையில் இதுவரை இந்த படம் 40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, இது இந்தியன்- 2 படத்தை விட குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்தமான வசூல் காரணமாகவே இதுவரை தக்லைப் படக்குழு அப்படத்தின் வசூல் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார்கள்.