சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாள திரையுலகில் வெளியாகி முதன் முதலில் 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த படம் ‛திரிஷ்யம்'. ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் வெளியான இந்த படம் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாக அமைந்த வருண் பிரபாகர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரோஷன் பஷீர் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் மற்றும் தெலுங்கிலும் தன்னுடைய அதே கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்ததை தொடர்ந்து அங்கே கொலம்பஸ், மல்லி பெல்லி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் புதிய படம் ஒன்று முதல் முறையாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் ரோஷன் பஷீர். அது மட்டுமல்ல மலையாளத்தில் ஹனிரோஸ் நடிப்பில் உருவாகி வரும் ‛ரேச்சல்' மற்றும் தமிழில் உருவாகும் ‛ஆல் பாஸ்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள இவர், தன்னுடைய கதாபாத்திரம் காரணமாக திரிஷ்யம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் தன்னால் நடிக்க முடியாமல் போனது எனக்கு வருத்தமே என்றும் கூறியுள்ளார்.