பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி, வரும் ஜூலை 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‛ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடக்க உள்ளது. அதில் முத்துக்குமாருடன் பணியாற்றிய யுவன்ஷங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், தமன், விஜய்ஆண்டனி, கார்த்திக்ராஜா, நிவாஸ் கே பிரசன்னா உள்ளிட்ட பல இசைமைப்பாளர்கள் இசை விருந்து கொடுக்கிறார்கள்.
தமிழ் சினிமா சரித்திரத்தில் இப்படி பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைவது இதுவே முதன்முறை. சித்தார்த், ஆண்ட்ரியா, திப்பு, உத்தாரா, சைந்தவி, ஹரிணி உள்ளிட்ட பலர் பாடுகிறார்கள். கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவிசோகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் முத்துக்குமார் பற்றி பேசுகிறார்கள்.
''மறைந்த முத்துக்குமாருடன் பணியாற்றிய பல இயக்குனர்களும் தங்கள் அனுபவங்களை சொல்ல இருக்கிறார்கள். இந்த விழாவுக்கு 8 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்துக்குமார் மறைந்த சில மாதங்களில் இப்படியொரு விழா எடுக்க நினைத்தோம். சில காரணங்களால் அது நடக்கவில்லை. இப்போது அதை செய்கிறோம்'' என்கிறார் இயக்குனர் ஏ.எல். விஜய்.