Advertisement

சிறப்புச்செய்திகள்

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார்

16 ஜூன், 2025 - 05:15 IST
எழுத்தின் அளவு:
Nadirshahs-pet-cat-dies-at-veterinary-hospital;-director-alleges-medical-negligence
Advertisement


மலையாளத்தில் பிரபல இயக்குனர் நாதிர்ஷா. நடிகர் திலீப்பும் இவரும் ஒரே காலத்தில் சினிமாவில் நுழைந்ததுடன் இருவரும் மிக நெருக்கமான நண்பர்களும் கூட. இயக்குனர் நாதிர்ஷா, 'கட்டப்பனையில் ஹிருத்திக் ரோஷன், அமர் அக்பர் ஆண்டனி' உள்ளிட்ட படங்களை இயக்கியதுடன் திலீப்பை வைத்து 'கேசு இ வீட்டின்டே நாதன்' என்கிற படத்தையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று தனது செல்லப்பிராணியான நோபில் என்கிற பூனையை குளிப்பாட்டி சுத்தம் செய்வதற்காக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு விலங்குகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் நாதிர்ஷா.

அப்போது அங்கிருந்த பெண் மருத்துவர் மற்றும் ஊழியர்கள் பூனைக்கு அதன் சீற்றத்தை தணிக்க வேண்டும் என்பதற்காக கழுத்தில் ஒரு கயிறு கட்டியதுடன் சிறிதளவு மயக்க மருந்தையும் கொடுத்திருக்கின்றனர். அந்த சமயத்தில் பூனை எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சியான நாதிர்ஷா இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள பாலரிவட்டம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார் நாதிர்ஷா.

இந்த புகாரில் தனது செல்லப் பூனைக்கு கழுத்தில் கட்டப்பட்ட கயிறு காரணமாக மரணம் சம்பவித்ததா அல்லது அதிக மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் அது உயிரிழந்ததா? இது குறித்து பிரேத பரிசோதனை செய்து உண்மையை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார் நாதிர்ஷா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான்குபேராவை கேரளாவில் வெளியிடும் ... குபேரா : தமிழ் டிரைலரை ஓவர்டேக் செய்யும் தெலுங்கு டிரைலர் குபேரா : தமிழ் டிரைலரை ஓவர்டேக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in