சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மரெட்டி, காட்பாதர் போன்ற படங்களில் நடித்துள்ள நயன்தாரா தற்போது அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் அவரது 157வது படத்திலும் இணைந்திருக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சிரஞ்சீவி நடித்த காட்சிகளாக படமாக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரியில் நடந்து வருகிறது.
நேற்று முதல் சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாராவும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அங்கு அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் கட்சி மற்றும் பல முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளையும் படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். முழு மர்சியல் கதையில் உருவாகும் இந்த படம் 2026 சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது. தற்போது சிரஞ்சீவி நடித்து முடித்துள்ள விஸ்வாம்பரா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.