தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மரெட்டி, காட்பாதர் போன்ற படங்களில் நடித்துள்ள நயன்தாரா தற்போது அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் அவரது 157வது படத்திலும் இணைந்திருக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சிரஞ்சீவி நடித்த காட்சிகளாக படமாக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரியில் நடந்து வருகிறது.
நேற்று முதல் சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாராவும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அங்கு அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் கட்சி மற்றும் பல முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளையும் படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். முழு மர்சியல் கதையில் உருவாகும் இந்த படம் 2026 சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது. தற்போது சிரஞ்சீவி நடித்து முடித்துள்ள விஸ்வாம்பரா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.