தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. நடிப்பு தாண்டி தயாரிப்பாளராகவும் உள்ள இவர் நடிகை சாயிஷாவை காதலித்து 2019ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். சினிமா தாண்டி ஆர்யா சில தொழில்களும் செய்து வருகிறார். குறிப்பாக சென்னையில் அண்ணாநகர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் 'ஸி ஷெல்' என்ற பெயரில் உணவகம் நடத்தினார்.
இந்நிலையில் இந்த உணவகங்களில் இன்று(ஜூன் 18) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. ஆர்யாவுக்கு சொந்தமான உணவு என்பதால் ஆர்யாவின் அண்ணா நகர் வீட்டிலும் ரெய்டு என தகவல் பரவ, மீடியாவினர் குவிந்தனர்.
இதுபற்றி ஆர்யாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், ‛‛சென்னையில் ஐடி ரெய்டு நடக்கும் ஓட்டலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது வேறு ஒருவருக்கு சொந்தமானது'' என தெரிவித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த உணவகத்தை கேரளா மாநிலம் தலச்சேரியை சேர்ந்த மூசா என்பவரிடம் ஆர்யா குடும்பம் விற்றுவிட்டார்களாம். ஆர்யா குடும்ப உணவகம் என பெயர் இருந்ததால் ஆர்யா உணவகத்தில் ரெய்டு என செய்தி பரவி விட்டது.