தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடித்து இந்த மாதம் 5ம் தேதி வெளியான படம் 'தக் லைப்'. இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவரைப் பற்றிப் பேசும் போது தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று பேசினார் கமல்ஹாசன்.
அது கன்னட அமைப்புகளின் கோபத்தைத் தூண்டியது. கமல்ஹாசன் பேசியதற்கு மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் 'தக் லைப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்றார்கள். கன்னட சினிமா வர்த்தக சபையும் படத்தை வெளியிட தடை விதிக்கிறோம் என்றார்கள்.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கமல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார். ஆனால், கமல் மன்னிப்பு கேட்கவில்லை. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வெளியீடு தடை குறித்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்சார் பெற்ற படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி படத்தைத் திரையிட்டு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று பெங்களூருவில் கர்நாடக மாநில துணை முதல்வர், “கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். கன்னட ஆதரவு அமைப்புகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் நமது வரம்புகளை மீறக் கூடாது, அமைதியாக இருக்க வேண்டும். யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. நமது மாநிலம் அமைதியை விரும்பும் மாநிலம்,” என்று பேசியுள்ளார்.