தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

1980களில் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாலச்சந்திர மேனன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு என சினிமாவில் அனைத்து துறைகளிலும் இவர் முத்திரை பதித்துள்ளார். 'மலையாளத்தின் பாக்யராஜ்' என்று போற்றப்பட்டார். தற்போது அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் மீனு முனீர் என்ற நடிகை இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் பலாத்கார புகார் கொடுத்தார். பாலச்சந்திரமேனன் இயக்கி நடித்த, 'தே இங்கோட்டு நோக்கியே' என்ற படத்தில் தன்னை நடிக்க அழைத்ததாகவும், படப்பிடிப்பு நாட்களில் ஓட்டலுக்கு வரவழைத்து தன்னை பலாத்காரம் செய்ததாகவும் அவர் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து நடிகை மீனு முனீரும், அவரது வக்கீலும் சேர்ந்து தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாக கூறி பாலச்சந்திர மேனன் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து நடிகை மீனு முனீர் முன்ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகை மீனு முனீரை கொச்சி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.