வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பிற்காலத்தில் சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் ஆகியோரின் துப்பறியும் நாவல்கள் திரைப்படமாகி உள்ளது. இதுபோல அந்த காலத்தில் துப்பறியும் கிரைம் திரில்லர் நாடகங்களை எழுதியவர்கள் வடுவூர் துரைசாமி அய்யங்கர், கே.ஆர்.ரங்கராஜூ, ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு.கோதைநாயகி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் கே.ஆர்.ரங்கராஜூவின் 'மோகன சுந்தரம்' நாவல் அதே பெயரில் திரைப்படமானது. அன்றைய ஹீரோ டி.ஆர்.மகாலிங்கம் தானே தயாரித்து நடித்தார். அவருடன் எஸ்.வரலட்சுமி, பி.ஆர்.பந்துலு, கே.சாரங்கபாணி, வி.கே.ராமசாமி, டி.கே.ராமச்சந்திரன், ஜே.பி.சந்திரபாபு, கே.சாய்ராம், வி.கே.கார்த்திகேயன், கொட்டாபுலி ஜெயராமன், வி.சுசீலா, கே.எஸ். அங்கமுத்து, ஜி.சகுந்தலா, சி.வி.வி.பந்துலு, ஜெயக்கொடி கே.நடராஜன், எஸ்.கே.வேணுபாய், எஸ்.ஆர்.லட்சுமி, வி.திருவேங்கடம், கே.எஸ்.ஹரிஹரன் உள்பட பலர் நடித்தனர். ஏடி கிருஷ்ணசாமி இயக்கினார்.
எம்.ஜி.லிங்கப்பா இசை அமைத்திருந்தார். சுமார் 30க்கும் மேற்பட்ட அன்றைய நட்சத்திரங்கள் நடித்தனர். சுமார் 3 மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் திகில் மற்றும் துப்பறியும் கதையாக ரசிகர்களை கவர்ந்தாலும் பொதுமக்களை கவரவில்லை. இதனால் சுமாரான வரவேற்பையே பெற்றது.