பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் |
சசிகுமார் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரீடம்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ளார். சசிகுமாரின் முந்தைய படமான டூரிஸ்ட் பேமிலியை போலவே இதுவும் இலங்கை தமிழர்களின் பின்னணியை கொண்டு அதே சமயம் வேறு விதமான கதை கோணத்தில் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சசிகுமார், “அடுத்தடுத்து இலங்கை தமிழர்களின் கதையிலேயே நடிக்கிறீர்களே, நீங்கள் இலங்கை தமிழருக்கு ஆதரவானவரா என்று கேட்கிறார்கள். நான் மொத்தத்தில் தமிழர்களுக்கு ஆதரவானவன். இன்னும் சொல்லப்போனால் டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு முன்னதாகவே இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. சில காரணங்களால் தாமதமாகி இப்போது வெளியாகிறது. இந்த படம் இலங்கை தமிழர்களின் கதை என்றாலும் இது வேறு விதமாக இருக்கும். இது ஜெயிலில் இருந்து விடுதலைக்காக தப்பிக்க கைதிகள் சிலர் நடத்தும் போராட்டமாக உருவாகியுள்ளது.
டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பார்த்துவிட்டு அது போல இருக்கும் என்று நினைத்து இந்த படத்திற்கு வர வேண்டாம். பொதுவாகவே நான் அனைவரிடமும் சொல்வது படம் வெளியாவதற்கு முன்பே உங்களுடைய கதை எந்த ஜானர் என்று சொல்லிவிடுங்கள். இல்லையென்றால் படம் பார்க்க வரும் ரசிகர்கள் அவர்களாக படத்தைப் பற்றி ஒன்று நினைத்துக் கொண்டு வந்து பார்க்கும்போது சில நேரம் அது அவர்களுக்கு ஏமாற்றம் தந்து விடும். அது படத்தின் வெற்றியையும் பாதித்துவிடும்” என்று பேசினார்.