வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ஜவான் படத்திற்கு பின் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் அட்லி. சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட பேண்டஸி படமாக ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. ஏற்கனவே இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இவர் அல்லாமல் இந்த படத்தில் மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோரும் நாயகிகளாக நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்னொரு நாயகியாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார் என கிட்டத்தட்ட உறுதியான தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 1 மற்றும் 2 படங்களில் நடித்தார் ராஷ்மிகா. இப்போது இந்தப்படம் மூலம் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க போகிறார்.