தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பாலசந்தர் இயக்கத்தில், எம்எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில், ஜெமினிகணேசன், சரோஜாதேவி, வாணிஸ்ரீ மற்றும் பலர் நடிப்பில் 1968ல் வெளிவந்த திரைப்படம் 'தாமரை நெஞ்சம்'. அப்படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் பின்னர் ரீமேக் செய்யப்பட்டது. அதன்பின் பாலசந்தர் இயக்கத்தில் சரோஜாதேவி எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
ஒரு முறை பாலசந்தர் மலேசியா சென்றிருந்த போது, அங்குள்ள ஒரு கடையில் பாலசந்தரை தற்செயலாக சந்தித்த சரோஜா தேவி, உங்கள் படங்களில் எல்லா நடிகர்களும் நான்கைந்து படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால், என்னை மட்டும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்க வைத்தீர்கள். பின்னர் நடிக்க அழைக்கவேயில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
அதற்கு பாலசந்தர், நீங்கள் நடித்த 'தாமரை நெஞ்சம்' ஒரு படமே அந்த நான்கைந்து படங்களுக்கு சமமானது என்று பாராட்டியுள்ளார். அந்த உரையாடல் குறித்து பாலசந்தரிடம் உதவியாளராக இருந்த மோகன், தற்போது சரோஜாதேவியின் மறைவு அஞ்சலியில் பகிர்ந்துள்ளார்.