துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
பாலசந்தர் இயக்கத்தில், எம்எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில், ஜெமினிகணேசன், சரோஜாதேவி, வாணிஸ்ரீ மற்றும் பலர் நடிப்பில் 1968ல் வெளிவந்த திரைப்படம் 'தாமரை நெஞ்சம்'. அப்படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் பின்னர் ரீமேக் செய்யப்பட்டது. அதன்பின் பாலசந்தர் இயக்கத்தில் சரோஜாதேவி எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
ஒரு முறை பாலசந்தர் மலேசியா சென்றிருந்த போது, அங்குள்ள ஒரு கடையில் பாலசந்தரை தற்செயலாக சந்தித்த சரோஜா தேவி, உங்கள் படங்களில் எல்லா நடிகர்களும் நான்கைந்து படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால், என்னை மட்டும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்க வைத்தீர்கள். பின்னர் நடிக்க அழைக்கவேயில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
அதற்கு பாலசந்தர், நீங்கள் நடித்த 'தாமரை நெஞ்சம்' ஒரு படமே அந்த நான்கைந்து படங்களுக்கு சமமானது என்று பாராட்டியுள்ளார். அந்த உரையாடல் குறித்து பாலசந்தரிடம் உதவியாளராக இருந்த மோகன், தற்போது சரோஜாதேவியின் மறைவு அஞ்சலியில் பகிர்ந்துள்ளார்.