வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தமிழ் சினிமா உலகில் தரமான பல படங்களைக் கொடுத்த ஒரு தயாரிப்பு நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். 'ஈட்டி, ஐங்கரன்' படங்களை இயக்கிய ரவி அரசு இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் கார்த்தி, கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.
படம் பற்றி விஷால், “இதோ ஆரம்பிக்கிறோம்! மதகஜராஜா வெற்றியைத் தொடர்ந்து, எனது அடுத்த படமான விஷால் 35ஐ சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி அவர்களின் 99வது படமாக, இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்குகிறோம். இது எங்களின் முதல் கூட்டணி. முதன்முறையாக என்னுடன் திரையைப் பகிர்ந்து கொள்ளும் துஷாரா விஜயன், மதகஜராஜா படத்திற்குப் பிறகு மீண்டும் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவாளராகவும், மார்க் ஆண்டனி படத்திற்குப் பிறகு என் அன்பு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைப்பாளராகவும் இணைகிறார்கள். படத்தொகுப்பு ஸ்ரீகாந்த், தயாரிப்பு வடிவமைப்பு துரைராஜ், ஸ்டைலிங் வாசுகி பாஸ்கர்.
அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினர். முழு நேர்மறை ஆற்றலுடன், உங்களின் ஆசிர்வாதமும் ஆதரவும் கொண்டு சென்னையில் 45 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். இந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இறைவன் ஆசீர்வதிக்கட்டும்!,” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.