ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி படம் ஜூலை 25ல் ரிலீஸ் ஆகிறது. சென்னையில் நடந்த விழாவில் விஜய்சேதுபதி பேசியதாவது, எனக்கும், பாண்டிராஜ்க்கும் ஏதோ மனஸ்தாபம். நான் அவருடன் பணி புரிய கூடாது என இருந்தேன். அவரும் அந்த மனநிலையில் இருந்தார். ஆனால், இயக்குனர் மிஷ்கின் பிறந்தநாளில் ஒன்றாக இணைந்தோம். இந்த படம் உருவானது. இதில் ஆகாசவீரன் என்ற கேரக்டரில் நடித்து இருக்கிறேன். கணவன், மனைவி உறவு குறித்து படம் பேசுகிறது.
டைவர்ஸ்சுக்கு அவசரப்பட வேண்டும் என்பது என் கருத்து. இப்போது ட்ரோல் குறித்து பேசுகிறார்கள். இன்றைக்கு எதையும் தடுக்க முடியாது. அந்த காலத்தில் கார்ட்டூன் மாதிரியான விமர்சனங்கள் இருந்தன. இப்போது ட்ரோல் வருகிறது. புதுப்படங்கள் மட்டுமல்ல, பழைய படங்களை கூட விமர்சனம், கிண்டல் செய்கிறார்கள்.
நாம் பொது வெளியில் ஒரு படைப்பை கொடுத்துவிட்டோம், மற்றவர்களின் விமர்சனங்களை தடுக்க முடியாது, ஊர் வாயை மூட முடியாது. ட்ரோல் இப்போது இருக்கிற நையாண்டி. நாமும் இப்படி பலவகைகளில் விமர்சனம் செய்து இருக்கிறோம். நம் மீது தவறு இருந்தால் மாற்றிக்கொள்ள வேண்டும். '' என்றார்.
விஜய்சேதுபதி மகன் நடித்த பீனிக்ஸ் படத்துக்கு, அவர் மகன் குறித்து பல்வேறு ட்ரோல் வந்தநிலையில், விஜய்சேதுபதி இப்படி பேசியுள்ளார்.