துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸி தம்பதியின் மகள் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். கடந்த சில வருடங்களாகவே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி பிஸியான கதாநாயகியாக நடித்து வருகிறார். மலையாளத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஓடும் குதிரை சாடும் குதிரை திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. தற்போது மலையாளத்தில் முதல் பெண் சூப்பர் மேன் கதை அம்சம் கொண்ட படமாக யோகா ; சாப்டர் ஒன்னு சந்திரா என்கிற படம் தயாராகி வருகிறது. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக மார்ஷல் என்கிற படத்திலும் நடிக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
சமீபத்தில் இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், இரண்டு குழந்தைகளுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “எப்போதுமே எனது நண்பனாக இருக்கும் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டு இருந்தார், பலரும் இந்த புகைப்படத்திற்கும் ஜாக்கி ஷெராவுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பி வந்த நிலையில், தற்போது அது குறித்த சஸ்பென்சை உடைத்துள்ளார் கல்யாணி.
இது குறித்து அவர் மீண்டும் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று நான் வெளியிட்ட புகைப்படத்தில் ஜாக்கி ஷெராப்புடன் இருக்கும் சிறுவன் தான் என்னுடைய நண்பன் பிரணவ் மோகன்லால். அந்த படத்தில் இருக்கும் அந்த மொட்டை வேறு யாரும் அல்ல,, அது நான் தான்” என்று கூறியுள்ளார்.