சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் முதல் முறையாக நடிகர் வடிவேலு முழு நீள குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் வடிவேலு மற்றும் பஹத் பாசில் இருவரின் கூட்டணி மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. இந்த காம்போவுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டமே உருவானது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இயக்குனர் சுதீஷ் சங்கர் இவர்களை வைத்து மாரீசன் என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டார், வரும் ஜூலை 24ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதில் பஹத் பாசில் திருடனாகவும் வடிவேலுவிடம் இருந்து பணத்தை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேசமயம் வடிவேலு இந்த படத்தில் அல்சீமர் என்கிற ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாதாரண ஞாபக மறதியாக இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக தனது அன்றாட செயல்பாடுகளையே மறக்க கூடிய ஒரு நோய் தான் இந்த அல்சீமர்.
இப்படி ஒரு கதாபாத்திரத்தில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான தன்மாத்ரா என்கிற படத்தில் நடிகர் மோகன்லால் அற்புதமாக நடித்திருந்தார். அதன்பிறகு இந்த நோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்களை வைத்து பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை. இந்த அல்சீமரால் பாதிக்கப்பட கதாபாத்திரத்திலும் மாமன்னன் போலவே ரசிகர்களின் கவனத்தை வடிவேலு ஈர்ப்பார் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.