75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் |

கர்நாடக மாநிலத்தில் டிக்கெட் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு ரூ.200 மட்டும் என கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து நேற்று வெளியிட்ட ஆணை ஒன்றில், அனைத்து மொழிப் படங்களுக்கான, மல்டிபிளக்ஸ் உள்ளிட் அனைத்து விதமான தியேட்டர்களும் பொழுதுபோக்கு வரி உட்பட 200 ரூபாய்க்கு மிகாமல் கட்டணத்தை வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்த ஆட்சேபணை எதுவும் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவைப் பொறுத்தவரை பெங்களூரூ உள்ளிட்ட மாநகரங்களில் சினிமா டிக்கெட் கட்டணம் என்பது மற்ற மாநிலங்களை விட அதிகம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வார நாட்களில் ஒரு கட்டணம், வார இறுதி நாட்களில் இன்னும் அதிகமான கட்டணமாக உள்ளது. ஐமாக்ஸ், 4டிஎக்ஸ் தியேட்டர்களில் 600 ரூ முதல் 1000 ரூ வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு இன்றைய நிலவரப்படி தற்போது ஓடிக் கொண்டிருக்கும் 'எப் 1' படத்திற்கு 4டிஎக்ஸ் தியேட்டர்களில் ரூ.800 கட்டணமும், ஐமாக்ஸ் தியேட்டர்களில் ரூ500 வரையிலும் வசூலிக்கப்படுகிறது.
2017ம் ஆண்டு தற்போதைய முதல்வர் சித்தராமையா முதல்வராக இருந்த போது இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இருந்தாலும் அவர்கள் தாங்களாக நிர்ணயித்த கட்டணங்களையே வசூலித்து வந்தனர். இருந்தாலும் அரசு அந்த விவகாரத்தில் அப்போது தீவிரம் காட்டவில்லை.
இதனிடையே, 2021ம் ஆண்டு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ஆதரவாக கர்நாடக உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. ஐமாக்ஸ், 4டிஎக்ஸ் வகை தியேட்டர்களுக்கான விலை நிர்ணயத்தை தியேட்டர்காரர்களே அமைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தது. அது தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் அந்த விதிகளில் சில திருத்தங்களைச் செய்து தற்போது புதிய உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து மீண்டும் வழக்கு தொடரப்படுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.