தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'திருச்சிற்றம்பலம், காதலிக்க நேரமில்லை' படங்களை அடுத்து விஜய் சேதுபதியுடன் 'தலைவன் தலைவி', தனுசுடன் 'இட்லி கடை' படங்களில் நடித்து முடித்திருக்கிறார் நித்யா மேனன். இதில், தலைவன் தலைவி படம் நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து ஒரு தகவல் வெளியிட்டார் நித்யாமேனன்.
அதாவது, ''நான் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது என் அம்மா வேலைக்கு சென்று விட்டதால், என் பாட்டிதான் என்னை வளர்த்தார். சிறுவயதிலிருந்தே நான் தனிமையைதான் அதிகமாக விரும்பி வந்தேன். வளர்ந்த பிறகு காதல் அனுபவம் ஏற்பட்டது. என்றாலும் அந்த காதல் எனக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக வலியைத்தான் கொடுத்தது. காதலில் விழுந்த போதெல்லாம் என் இதயம் உடைந்து போனது. நான் விரும்பிய அழகான ஒரு வாழ்க்கை இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அதனால் இப்போது காதல் உணர்வுகளிலிருந்து வெளியே வந்து விட்டேன்.
என்னுடைய சினிமா பயணத்தில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறேன். ஆன்மிகத்திலும் ஈடுபாடு காட்டுகிறேன். அதே சமயம் வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆத்மார்த்தமான ஒரு துணை கிடைத்தால் அப்போதே திருமணம் செய்து கொள்வேன். என்றாலும் எனக்கு இப்போது நான் இருக்கும் தனிமையான வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. இதை நான் ரசித்து வாழ்ந்து வருகிறேன்,'' என்கிறார் நித்யா மேனன்.