வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
'திருச்சிற்றம்பலம், காதலிக்க நேரமில்லை' படங்களை அடுத்து விஜய் சேதுபதியுடன் 'தலைவன் தலைவி', தனுசுடன் 'இட்லி கடை' படங்களில் நடித்து முடித்திருக்கிறார் நித்யா மேனன். இதில், தலைவன் தலைவி படம் நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து ஒரு தகவல் வெளியிட்டார் நித்யாமேனன்.
அதாவது, ''நான் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது என் அம்மா வேலைக்கு சென்று விட்டதால், என் பாட்டிதான் என்னை வளர்த்தார். சிறுவயதிலிருந்தே நான் தனிமையைதான் அதிகமாக விரும்பி வந்தேன். வளர்ந்த பிறகு காதல் அனுபவம் ஏற்பட்டது. என்றாலும் அந்த காதல் எனக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக வலியைத்தான் கொடுத்தது. காதலில் விழுந்த போதெல்லாம் என் இதயம் உடைந்து போனது. நான் விரும்பிய அழகான ஒரு வாழ்க்கை இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அதனால் இப்போது காதல் உணர்வுகளிலிருந்து வெளியே வந்து விட்டேன்.
என்னுடைய சினிமா பயணத்தில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறேன். ஆன்மிகத்திலும் ஈடுபாடு காட்டுகிறேன். அதே சமயம் வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆத்மார்த்தமான ஒரு துணை கிடைத்தால் அப்போதே திருமணம் செய்து கொள்வேன். என்றாலும் எனக்கு இப்போது நான் இருக்கும் தனிமையான வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. இதை நான் ரசித்து வாழ்ந்து வருகிறேன்,'' என்கிறார் நித்யா மேனன்.