பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு |
தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் கடந்தாண்டு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பின் துணை முதல்வராகவும் பொறுப்பில் உள்ளார். தேர்தலுக்கு முன்னதாகவே அவர் நடிப்பில் 'ஹரிஹர வீர மல்லு, ஓஜி, உஸ்தாத் பகத்சிங்' ஆகிய படங்கள் படப்பிடிப்பில் இருந்தன.
துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு 'ஹரிஹர வீர மல்லு', 'ஓஜி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் ஹரிஹர வீர மல்லு படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
சில வாரங்களாக 'உஸ்தாத் பகத்சிங்' இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா , ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை கிளைமாக்ஸ் காட்சியுடன் பவன் கல்யாண் அவரின் பிஸியான நேரத்திலும் நடித்து தந்து இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.