தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகர் மகேஷ்பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 29வது படத்தில் நடித்து வருகிறார். காடுகளை மையப்படுத்திய வீரதீர சாகச கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, வில்லனாக பிரித்விராஜ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது சீரான இடைவெளியில் நடைபெற்று வருகிறது. கிடைக்கும் இடைவெளிகளில் மகேஷ்பாபு தனது குடும்பத்துடன் அவ்வப்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா கிளம்பி விடுகிறார்.
அந்த வகையில் தற்போது இலங்கைக்கு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மகேஷ்பாபு. அவரது மனைவி நம்ரதா சிரோத்கர் தான் எடுத்துள்ள செல்பி ஒன்றை அதை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் இந்த பயணத்தை என்ஜாய் செய்வதை கூட்டத்தில் ஒருவனாக பின்னால் நின்று புன்முறுவலுடன் பார்த்து கொண்டிருக்கிறார் மகேஷ்பாபு.