சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
கடந்த 2011ம் ஆண்டில் தமிழில் க்ரிஷ் இயக்கத்தில் சிலம்பரசன், அனுஷ்கா, பரத் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'வானம்'. இந்த படம் தெலுங்கில் வெளியான 'வேதம்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வேதம் படம், வானம் படமாக தமிழில் உருவானது எப்படி என்று இயக்குனர் க்ரிஷ் தற்போது அளித்த பேட்டியில் கூறியதாவது, "வேதம் திரைப்படம் அந்த காலகட்டத்தில் தெலுங்கில் வெளியான ஒரு அந்தாலஜி படம். அந்தப் படத்தை பார்த்த பிறகு சிலம்பரசன் எனக்கு போன் செய்து, தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்யலாம் என்று கேட்டார். அதன் பிறகு தான் 'வானம்' படம் உருவானது. விடிவி கணேஷ் சார் தயாரித்தார். சிம்பு சார் அருமையாக நடிக்கக்கூடியவர். அவருடன் அன்றைக்கு நட்பு ஏற்பட்டது. இப்போது நண்பர்களாக இருக்கிறோம். என்னுடைய எல்லா படங்களையும் பார்த்து எனக்கு பாராட்டி மெசேஜ் செய்வார்." என தெரிவித்துள்ளார்.