தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. லடாக்கில் பல இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் மாதவன் தற்போது லடாக்கில் சிக்கி உள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவிட்டிருப்பதாவது: ''லடாக் வரும்போது எல்லாம் இதுபோன்று சிக்கிக் கொள்கிறேன். 2008ம் ஆண்டு படப்பிடிப்பிற்காக இங்கு வந்தபோது பனிப்பொழிவில் சிக்கினேன். 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் லே பகுதியில் சிக்கியுள்ளேன். இங்கு விமானங்கள் இல்லை.
கடந்த நான்கு நாட்களாக இங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. விமானங்கள் இல்லாததால் என்னால் ஊர் திரும்ப முடியவில்லை. விரைவில் வானம் தெளிவாகும். வீடு வந்து சேருவேன்", என்று குறிப்பிட்டுள்ளார்.