பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இதன் அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஆப்ரிக்க நாடான கென்யாவில் நடைபெற உள்ளது. அதற்காக 120 பேர் கொண்ட குழுவினர் கென்யாவுக்குச் செல்ல உள்ளனர்.
கென்யா நாட்டின் பிரதம கேபினட் செயலாளர் மற்றும் வெளியுறவு மற்றும் புலம்பெயர் விவகாரங்களுக்கான கேபினட் செயலாளர் முசாலியா முடவாடி-யை நேற்று ராஜமவுலி சந்தித்துப் பேசியுள்ளார். கென்யாவில் படப்பிடிப்பை நடத்துவதற்கான அரசு அனுமதியையும் ராஜமவுலி பெற்றார்.
பின் பேசிய முசாலியா முடவாடி, “கென்யாவைப் பொறுத்தவரை, இந்த முடிவு சினிமாவைத் தாண்டியது; இது நாட்டின் இயற்கை அழகு, கலாசார செழுமை மற்றும் ஒப்பற்ற விருந்தோம்பலை உலகளாவிய பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தும் ஒரு முக்கிய தருணமாகும். இத்தகைய உயர்மட்ட திட்டத்தில் கென்யாவின் பங்கேற்பு, நாட்டை ஒரு முதன்மையான சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், சர்வதேச திரைப்பட தயாரிப்பு மற்றும் கலாசார ஒத்துழைப்புக்கான வளர்ந்து வரும் மையமாகவும் நிலைநிறுத்துவதற்கு ஒரு படியாகும் என்று அவர் கூறினார்.
சர்வதேச திரைப்பட திட்டங்களை ஆதரிப்பதற்கும், உலகளாவிய படைப்புத் தொழில்களுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார். இத்தகைய முயற்சிகள் உள்ளூர் திறமைகளுக்கு வாய்ப்புகளைத் திறக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆப்பிரிக்க காட்சிகளில் கிட்டத்தட்ட 95 சதவீதம் கென்யாவில் படமாக்கப்படுகிறது.புகழ்பெற்ற மசை மாரா புல்வெளிகளிலிருந்து நைவாஷா ஏரியின் அமைதியான கரைகள், சம்பூரின் கரடுமுரடான அழகு, மற்றும் அம்போசெலியிலிருந்து கிளிமஞ்சாரோ மலையின் கம்பீரமான காட்சிகள் வரை, கென்யாவின் பல்வேறு மற்றும் புகைப்படத்திற்கு ஏற்ற நிலப்பரப்புகள் உள்ளிட்ட இடங்களில் இப்படம் படமாக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இப்படத்தின் பட்ஜெட் 1100 கோடி என்றும், 120 உலக நாடுகளில் இப்படம் வெளியாக உள்ளது என்றும் கென்யா பத்திரிகைகள் நேற்றைய சந்திப்பைக் குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன.