தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித் குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது 64வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பை இன்னும் தொடங்கவில்லை. டிசம்பர் அல்லது ஜனவரியில் துவங்கலாம் என கூறப்படுகிறது.
அதற்குள் அஜித் 65வது படத்தை இயக்குவது யார் என்பது குறித்து செய்திகள் வெளியாக துவங்கிவிட்டன. அதன்படி, எப்.ஐ.ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் தான் அஜித் 65வது படத்தை இயக்குவதற்காக கதை கூறியுள்ளார் என்கிறார்கள். ஏனெனில், 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித் நடிக்கும் காலகட்டத்தில் மனு ஆனந்த் அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்போது இருந்து இருவர்கிடையே நல்ல நட்பு உள்ளது. அதுதான் அடுத்து இந்த கூட்டணி இணைவதற்கான காரணம் என கூறப்படுகிறது.
மனு ஆனந்த் தற்போது ஆர்யா, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில் ‛மிஸ்டர் எக்ஸ்' என்ற படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.