75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் |

படம் வெற்றி, தோல்வி என்று மாறி மாறி வந்தாலும் தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. ஹிந்தி, மலையாள மொழியில் நடித்துள்ளார். ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 8 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சி நடத்த 70 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனாலும் தனக்கு கடன் இருப்பதாக இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ''இந்த விளையாட்டில் பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். நான் ஆயிரத்தில் சம்பாதித்தபோது அதே ஆயிரத்துக்கு கடன் இருந்தது. லட்சத்தில் சம்பாதித்தபோது அதற்கு தகுந்த கடன் இருந்தது. தற்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன், ஆனாலும் அந்த கடன் பிரச்சினை என்னுடன் இருக்கத்தான் செய்கிறது. அதனால் அதனுடனேயே வாழ கற்றுக் கொண்டேன். வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வது தான் சவால்'' என்கிறார் விஜய் சேதுபதி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாஸ்க் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் "இந்த படத்தில் நடிக்க 10 நாள் என்று கூட்டிச் சென்று வச்சு செய்தார்கள். முழு சம்பளமும் தரவில்லை. இன்னும் சம்பளபாக்கி இருக்கிறது. அதை தந்தால் நன்றாக இருக்கும்" என்று பேசியது குறிப்பிடத்தக்கது.