கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

கடந்த 2017 பிப்ரவரியில் பிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்பில் இருந்து திரும்பும் போது காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அது வீடியோவாக எடுக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இந்த கடத்தலில் பத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதில் முதன்மை குற்றவாளியாக கார் கடத்தலில் நேரடியாக ஈடுபட்ட பல்சர் சுனில் என்பவனும் எட்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப்பும் சேர்க்கப்பட்டனர். பின்னர் அதே வருடம் ஜூலை மாதம் நடிகர் திலீப் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 88 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
சம்பவம் 2017ல் நடந்திருந்தாலும் 2020 ஜனவரியில் இருந்து தான் இந்த வழக்கு குறித்த விசாரணை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சூடு பிடித்தது. இடையில் சில தடங்கல்கள் காரணமாக ஆமை வேகத்தில் நகர்ந்த இந்த வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது இந்த வழக்கு விசாரணை முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் டிசம்பர் 8ம் தேதி வெளியாகும் என எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.