‛பத்தா' படம்... 'மகளே' பாடல் வெளியீடு : அப்பாமகள் பாசம் கதையா? | 'சிக்மா' டைட்டிலுக்கு விளக்கம் சொன்ன ஜேசன் சஞ்சய் | பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் ஒரே ஒரு காட்சியில் அறிமுகமான மோகன்லால் | மராத்தி தெரிந்திருந்தும் சஞ்சய் தத் வேண்டுமென்றே பேசாமல் தவிர்த்தாரா ? : வெளிச்சம் போட்ட பழைய வீடியோ | உதவி இயக்குனராக இருந்தவர் ‛ஹனுமான் அன்ஷ்' படத்தின் ஹீரோவாக மாறியது எப்படி? | தம்பி பட புரமோஷனில் கலந்து கொண்டு நடனமாடி அசத்திய விஜய் தேவரகொண்டா | பிளாஷ்பேக்: காணாமல் போன சிவாஜி படம் | சினிமாவில் நடிப்பதற்காக நிஜ சிங்கத்துடன் பயிற்சி எடுக்கும் நடிகர் | இம்மார்டலை தொடந்து புறக்கணிக்கும் கயாடு லோகர் | நிகிலா விமலுக்கு கை கொடுக்குமா தூமகேது ? |

இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படம் பத்தா. இயக்குனர் அட்லி படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் முதல் பாடலான மகளே...வை சாய் அபயங்கர் இசையமைத்து, பாடியுள்ளார், கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். 'மகளே' பாடல் முற்றிலும் மாறுபட்ட மென்மையான மெலடி பாணியில் உருவாகி உள்ளது.
குறிப்பாக 80-களின் இசை உலகை இந்த பாடல் கொண்டு வந்துள்ளது. 'மகளே' பாடலின் வீடியோவும் 80-களின் இசை உலகை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. பழைய கால இசைக்கூடம், அக்கால ரெக்கார்டிங் முறைகள் என அந்தக் காலகட்டத்தின் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.
ஒரு தந்தை தனது மகளைப் பார்த்து அன்புடன் பேசுவது போன்ற உணர்வில் உருவாகியுள்ள இந்தப் பாடல், மகளின் மீதான பாசத்தையும் அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. “மகளே, மந்திரச் சிமிழே, மங்கள விளக்கே கேளடி” எனத் தொடங்கும் கார்த்திக் நேத்தாவின் வரிகள் கவிதையைப் போல அமைந்துள்ளது. இதனால் பத்தா படம் அப்பா, மகள் பாசத்தை.அடிப்படையாக கொண்ட கதை என தெரிகிறது. அக்டோபர் 1ல் படம் ரிலீஸாகிறது.




