இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பிரபு, ஜெயராம் இவர்களுடன் அமிதாப்பச்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'.
இப்படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் ஆரம்பமாகி நடைபெற்றது. கடந்த வருட ஜனவரி மாதம் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை பாண்டிச்சேரியில் நடத்தினார்கள். அதன்பின் ஹைதராபாத்தில் பிப்ரவரி மாதம் வரை நடத்தினார்கள்.
மார்ச் மாதம் கொரானோ தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெறாத படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது. இப்படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா ஆகியோருடன் ஹைதராபாத் வந்து தங்கியுள்ளாராம்.
தொடர்ந்து ஒரு மாத காலம் தங்கியிருந்து அவருடைய படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளாராம். இதன்பின் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு இடைவிடாமல் நடக்கும் எனத் தெரிகிறது.