‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'துக்ளக் தர்பார்'.
கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்போது படத்தின் நாயகி ராஷி கண்ணா இப்படத்திற்கான அவருடைய படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
இது குறித்து, “சூப்பர் திறமைசாலியான விஜய் சேதுபதி உடன், மற்றுமொரு அழகான பயணம் 'துக்ளக் தர்பார்' நிறைவுக்கு வந்தது. மறக்க முடியாத இப்படத்தைக் கொடுத்த இயக்குனர் தீனதயாளன், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர், அனைவருக்கும் நன்றி. படத்தை நீங்கள் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் ராஷி கண்ணா நடிக்கும் ஐந்தாவது படம் இது. 'சங்கத்தமிழன்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார்.