தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகை சரண்யாவும், இயக்குனர் பொன்வண்ணனும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது பொன்வண்ணன் சினிமா, தொலைக்காட்சி தொடர்களிலும், சரண்யா திரைப்படங்களில் அம்மா வேடத்திலும் நடித்து வருகிறார்கள்.
இந்த தம்பதிகளுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் சினிமாவுக்கு வரமாட்டார்கள் என்று ஏற்கெனவே சரண்யா அறிவித்து விட்டார். இந்த நிலையில் மூத்த மகள் பிரியதர்ஷினுக்கு பெரியவர்கள் திருமணம் பேசி முடித்துள்ளனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது.
இது தனிப்பட்ட குடும்ப விழா என்பதால் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவில்லை. திருமணத்திற்கு அனைவரையும் அழைக்க இருக்கிறார்கள். மணமகன் குறித்த தகவல் எதையும் சரண்யா வெளியிடவில்லை. நிச்சயதார்த்த படங்கள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளளது.