செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் நவம்பர் 10 முதல் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன. கடந்த மூன்று மாதங்களாக 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பிப்ரவரி 1 முதல்தான் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தார்கள்.
தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்குப் பிறகுதான் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனாலும், இதுவரையிலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கியுள்ளனர்.
கேரளாவில் பிப்ரவரி மாதம் முழுவதும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என அரசு அறிவித்துவிட்டது. தமிழ்நாட்டில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மற்ற மாநிலங்களில் உள்ள திரையுலகினரும் 100 சதவீத அனுமதி வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
'கேஜிஎப் 2, சலார்' பட இயக்குனராக பிரஷாந்த் நீல் கர்நாடக அரசுக்கு, “சினிமா அநேகம் பேருக்கு என்டர்டெயின்மெட், ஆனால், பலருக்கு அது வாழ்க்கை” என 100 சதவீத இருக்கைக்கு அனுமதி தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். அது போலவே மற்ற திரையுலகிலும் கோரிக்கை எழுந்து வருகிறது.