ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் கடந்த மாதம் ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. 50 சதவீத இருக்கைகளுடன் வெளிவந்த இந்தப் படம் வட இந்திய மாநிலங்களைத் தவிர உலகம் முழுவதும், தென்னிந்தியாவிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
கொரோனா தொற்றால் தியேட்டர்கள் பக்கம் வராமல் இருந்த மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைத்ததில் 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே முக்கிய பங்குண்டு. கடந்த ஜனவரி 29ம் தேதி ஒடிடி தளத்திலும் 'மாஸ்டர்' வெளியானது. இருப்பினும் பல ஊர்களில் தியேட்டர்களிலும் இன்னும் மக்கள் வந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நாளையுடன் படம் வெளிவந்து 25 நாளாகப் போகிறது. இந்த 25 நாட்களில் படம் 250 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கை ஏற்படுத்தி வருகின்றனர்.
50 சதவீத இருக்கைகளிலேயே 250 கோடி ரூபாய் வசூல் என்பது சினிமா வியாபாரத்தில் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. ஓடிடி தளத்தில் மட்டும் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் 300 கோடி ரூபாய் வசூலைக் கூடத் தொட்டிருக்கும் என்கிறார்கள்.