ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், அனைவருக்குமே ஒரு வருடம் தான் லாக்டவுன். ஆனால் நான் பத்து வருடங்களாக படவாய்ப்புகள் இல்லாமல் லாக்டவுனில் இருக்கிறேன் என்று சொல்லி கண்கலங்கியிருந்தார் வடிவேலு. இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து தற்போது வடிவேலு இரண்டு புதிய படங்களில் கமிட்டாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, மெட்டிஒலி சீரியல் மூலம் புகழ் பெற்ற திருமுருகன் அதையடுத்து எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு போன்ற படங்களை இயக்கினார். அந்த இரண்டு படங்களிலுமே வடி வேலுவும் நடித்திருந்தார். இந்த நிலையில் அடுத்த படியாக சத்யஜோதி பிலிம்சுக்காக தான் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு-ஆர்.ஜே.பாலாஜி இருவரையும் இணைத்து இயக்கப்போ¡கிறாராம் திரு முருகன்.
அதையடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் வடிவேலு நடிக்கயிருப்பதாக இன்னொரு செய்தியும் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் வடிவேலு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.